இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மனித வர்க்கத்தின் மறைக்கப்பட்ட கண்கள்

மனித வர்க்கத்தின் மறைக்கப்பட்ட கண்கள்  இறைக் கோட்பாட்டை முன் வைத்தவர்கள் அனைவருமே மனிதர்கள்தான். ஆனால் அப்படிச் சொன்னால் இறைவனை உருவாக்கியவன் மனிதனே என்ற உண்மை எளிதில் விளங்கிவிடும் என்பதனாலேயே இறைக் கோட்பாட்டைச் சொன்னவர்கள் தேவர்களுக்கு இணையான ஞானிகள் (ரிஷிகள்) என்றும், அவர்கள் மொழிந்த கோட்பாடுகள் வேதங்கள் என்றும், இவற்றிற்குக் காலங்கள் இல்லை என்றும், இதன் மொழி தேவனால் மொழியப்பட்டது என்றும் கட்டமைக்கப்பட்டு, அதைக் காலங்காலமாய் யாரும் அறியாமல் காத்து நின்று, இறைநம்பிக்கையை ஏற்றுக் கொள்ளும் அளவில், அதனை மறைமுகமாகக் குறிப்பிட்டும், பரப்பியும் வந்தார்கள், அதில் நன்மையும், அதிகாரமும் பெற்றவர்கள். அதாவது பொருளை (இயற்கையை) மறை (வேதம்) ஆக்கி, அதை மறைபொருளாக ஆக்கி வைத்து விட்டார்கள். இம்மறை பொருளின் உண்மையைத் தேடுவதே மெய்ஞானம் என்றும், அதைத் தேடுவோரே ஞானிகள் என்றும், அது தேடுவோர் அனைவருக்கும் அகப்படாது என்றும், பிறப்பினால் உயர்ந்தோரே அதை அடைய முடியும் என்றும், தேவநெறி, வேதம், சாத்திரம், மனுதர்மம் இவை அனைத்தும் பிரம்மம் என்ற ஒன்றே என்றும், அதற்குத் தாங்கள் மட்டுமே உரியவர்கள் என்றும், தங்களை...

புதுச்சேரி விடுதலையும் சுதந்திரமும்

  புதுச்சேரி விடுதலையும் சுதந்திரமும்  புதுச்சேரி 280 ஆண்டுக் காலமாக பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியின் வசம் இருந்து வந்தது. 1947 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காரர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்ற பிறகு, புதுச்சேரியிலும் உந்தப்பட்ட விடுதலை உணர்வினால் 1954 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் நாள், புதுச்சேரி சுதந்திரம் பெற்றது. அதற்காகப் பிரெஞ்சு இந்திய ஒப்பந்தம் ஒன்று இந்திய அரசுக்கும், பிரான்சு அரசுக்கும் இடையில் கையெழுத்தான பிறகு, பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை விட்டு வெளியேறினர். இந்தியாவை விட்டுப் பிரிட்டிஷ் காரர்கள் வெளியேறிய நாளை இந்திய சுதந்திர தினம் என்று குறிப்பிடுவதைப் போல் புதுச்சேரியை விட்டுப் பிரெஞ்சுக் காரர்கள் வெளியேறிய அந்த நவம்பர் ஒன்றாம் நாள்தான் புதுச்சேரியின் சுதந்திர நாள்.  புதுச்சேரி சுதந்திரத்தின் போது கையெழுத்திடப்பட்ட அந்தப் பிரெஞ்சிந்திய ஒப்பந்தம், இந்தியப் பாராளுமன்றத்திலும், பிரான்சின் பாராளுமன்றத்திலும் ஒப்புதல் பெற்ற பிறகுப் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என்னும் நான்கு புதுச்சேரிப் பகுதிகளும் இந்தியாவுடன் சட்டபூர்வமாக இணைக்கப்பட்டன. அந்த நாள் தான் 1962,...

தீ பரவட்டும்

  தீ பரவட்டும் விட்டன்பர்க் . கிழக்கு ஜெர்மனியின் ஒரு நகரம். விட்டன் பர்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த மார்ட்டின் லூதர், அந்நகர தேவாலயத்தின் மதகுருவாகவும் இருந்தார். கி.பி. 1500 களின் தொடக்கத்தில் கிறித்துவ தேவாலயங்கள் பாவமன்னிப்புச் சீட்டு விற்கும் பஜனை மடங்களாக நிலை பெற்றிருந்தன. எத்தகைய பாவத்திற்கும் பணம் கொடுத்தால் பாவ மன்னிப்பு உண்டு. பாவத்தின் தன்மையைப் பொறுத்துப் பணத்தின் அளவும் மிகும். இறந்துபோய் நரகத்தில் இருப்பவரின் பாவங்கள் கூடப் பணத்தினால் இங்கிருந்தே பாவமன்னிப்புப் பெற்றன. கோயில்கள் கொள்ளைக் கூடாரமாக மாறினால் ஏழைகள் இறைவனிடமிருந்து விலகித் தானே ஆகவேண்டும். இவ்வநீதியைப் பொறுத்துக் கொள்ள முடியாத மார்ட்டின் லூதர் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்தார். தன்னை ஒர் உண்மையான கிறித்தவனாகக் கருதிய மார்ட்டின் லூதர், இறைவனின் கருணை எல்லோருக்கும் பொதுவானதே தவிர, இடைத்தரகர்கள் மூலம் பணம் கொடுத்துப் பாவ மன்னிப்புப் பெறுவது, இயேசு கிறித்துவின் போதனைகளைத் திரிப்பதாகும் என்றார். போலியான புனிதங்கள் குறித்துக் கத்தோலிக்கத் தேவாலயங்களில் விவாதிக்கக் கோரிய லூதர், அதற்குத் தேவனின் இடைத்தர...

சமஸ்கிருதம் யாருடைய மொழி ? முனைவர் சிவ. இளங்கோ

படம்
Video link https://youtu.be/55rbsZECJ88