"கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புலகப் பயணம்" -முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி. இந்திய வரலாறில் மிகக் குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு அடிப்படையாக அமைந்த காலகட்டத்தில் (1920 களில்) 1924 ஆம் ஆண்டில் பிறந்தவர் விஜயரங்கம். பிரெஞ்சிந்தியா என்று அறியப்பட்ட புதுச்சேரியில் தொடக்கக் கல்வியும், உயர்நிலைக் கல்வியும் பயின்றார். பாரதியார், பாரதிதாசன் கவிதைகளில் நெஞ்சைப் பறிகொடுத்த விஜயரங்கம், தானும் அதுபோலவே கவிதைகள் எழுதிப் பழகினார். கவிதைப் படைப்புகளுக்காகத் தன்னை தமிழ் ஒளியாக்கிக் கொண்டார் விஜயரங்கம். 1940 களின் பிற்பாதியில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுக்கும், கவிஞர் தமிழ் ஒளிக்கும் தொடர்பு ஏற்படுகிறது. இதற்கு முன்பே பாரதிதாசன் கவிதைகளில் ஈடுபாடு கொண்டிருந்த தமிழ் ஒளி, தொடர்ந்து திராவிட இயக்கத்தின் அரசியலோடு இணைகிறார். திராவிட நாடு, தமிழ்நாடு என்று தன் பயணத்தில் பாவேந்தரின் குயில் இதழிலும், அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு இதழிலும் பல கவிதைகளைப் படைக்கிறார். திராவிட மாணவர் கழகத்தில் தீவிரமாகச் செயல்பட்டு, குடந்தையிலும், பண்ணுருட்டியிலும் நடந்த திராவிடர் மாணவர் கழக மாநாடுகளிலும் தமிழ் ஒளி கலந்து...
கருத்துகள்